ஞாபகம்

அழகைப் பார்த்தால்
அடியே உன்தன் ஞாபகம்
அன்பைப் பார்த்தால்
அடியே உன்தன் ஞாபகம்

என் முகத்தைக் கண்டால்
அடியே உன்தன் ஞாபகம்
அடியேன் அழகாய் தெரிந்தால்
அடியே உன்தன் ஞாபகம்

மலரைக் கண்டால்
அடியே உன்தன் ஞாபகம்
மழலை கேட்டால்
அடியே உன்தன் ஞாபகம்

நகம் கடித்தால்
அடியே உன்தன் ஞாபகம்
நரை வந்தாலும்
இருக்குமே உன் தன் ஞாபகம்

[]