முதல் காதல் (Abridged)

உன்னை காண மனம் துடித்தது
கண்டதும் தெம்பு வந்தது
கணவிலே நீ வந்தது
இதெல்லாம் காதல் என்பது
புரியவில்லை அப்போது

கண்ணிலே ஒளி பிறந்தது
நெஞ்சிலே கனம் குரைந்தது
அன்றே உன்மேல் காதல் இருந்தது
இன்று தான் எனக்கு உணர்ந்தது

உன்னை எண்ணியே காலம் சென்றது
நீ இருக்கையில் காலம் பறந்தது
எந் நாளும் உன்னை எண்ணியே
இன்றும் மனம் மகிழ்ந்தது

உன்னால் கவிதை வந்தது
உன்னால் வலி பறந்தது
உன் மேல் காதல் வந்ததை
அறியாமல் போனதென்ன

இன்று என்மேல் வெறுப்பு வந்தது
காதல் மேலும் வளர்ந்தது
உன்னை எண்ணிப் பார்க்கையில்
இன்றும் கவிதை வந்தது

[]