முதல் காதல் (Full Version)

உன்னை காண மனம் துடித்தது
கண்டதும் தெம்பு வந்தது
கணவிலே நீ வந்தது
இதெல்லாம் காதல் என்பது
புரியவில்லை அப்போது

கண்ணிலே ஒளி பிறந்தது
நெஞ்சிலே கனம் குரைந்தது
அன்றே உன்மேல் காதல் இருந்தது
இன்று தான் எனக்கு உணர்ந்தது

உன்னை எண்ணியே காலம் சென்றது
நீ இருக்கையில் காலம் பறந்தது
எந் நாளும் உன்னை எண்ணியே
இன்றும் மனம் மகிழ்ந்தது

உன்னால் கவிதை வந்தது
உன்னால் வலி பறந்தது
உன் மேல் காதல் வந்ததை
அறியாமல் போனதென்ன

நினைவெல்லாம் நீயே இருந்ததால்
காதலை கண்டறிய முடியவில்லை

நீயும் தகவல் சொல்லவில்லை
தடயம் மட்டும் விட்டுச் சென்றாய்
வழக்கம் போல் இந்த மடையனுக்கு
மண்டையில் ஏற வில்லை

இன்று, நீயே விரும்பினாலும்
வர முடியாத நிலையில் நீயும்…
உன்னை எண்ணியே
வருந்தும் நிலையில் நானும்…

கையில் இருந்ததை கோட்டைவிட்டு
இன்று கவிதை பாடித் தேற்றி கொள்கிறேன்

கல்யாணதிற்கு பெண் தேடுகிறார்கள்
எப்படி பெண் வேண்டும் விவரித்தேன்
பின்பு தான் தெரிந்தது அவை அனைத்தும்
உன்னில் இருப்பதென்று

கையில் இருந்த உன்னை துளைத்து விட்டு
உன்னை போல் ஒருத்தியை தேடுகிறேன்
உம்…எனக்கே சிரிப்பு வருது

இன்று என்மேல் வெறுப்பு வந்தது
காதல் மேலும் வளர்ந்தது
உன்னை எண்ணிப் பார்க்கையில்
இன்றும் கவிதை வந்தது

நாம் சேரும் நெனப்பு வருது
தினமும் ஆசை வளருது
இதெல்லம் சரியா தப்பா
நெஞ்சிலே கேள்வி எழுது (எழுந்தது)

பதில் சொல்ல யாரும் இல்லை
இருந்திருந்தால் இந்நிலை இங்கு இல்லை
வாழ்க்கையே கேள்விக்குறியா
இல்லை நான் அப்படி ஆக்கிக் கொண்டேனா ?!

[]