முத்துச் செல்வம்

நம் வழி வந்தாலும், நமது இல்லையே,
வந்து செல்லும் வழிப்போக்கன் நமது செல்வமே,

அணை போட்டு கட்டி வைக்க, ஆறும் இல்லையே – அவர்
ஆற்றலை பூட்டி வைக்க யாரும் இல்லையே

கைபிடித்து நடத்தி செல்வது நமது சேவையே
நடந்த பின் கடந்து செல்வது அவரின் தேவையே

[2017.07]