மூன்று முடிச்சு

:1:

பெண்ணை மணம் முடிக்க
பணம் பார்க்கவில்லை என்றால் முதல் முடிச்சு
இணம் பார்க்கவில்லை என்றால் இரண்டாம் முடிச்சு
பின், இரு மனம் சேர வருவதுதான் மூன்றாவது முடிச்சு.

பணம் கேட்டால் முதல் முடிச்சு கிடையாது
இணம் பார்த்தால் இரண்டாவதும் போயாச்சு

பின், ஒற்றை முடிச்சு போட்டுப் பார்த்தால்
மாங்கல்யமும் அவிழ்ந்து விழும்
மங்கையின் வாழ்வும் அறுந்து விடும்.

:2:

மூன்று முடிச்சு போட
மூன்று ground கேட்டாக
பத்து முடிச்சு போடுவதென்றால்
பத்து ground கேட்பாரோ
ஒற்றை முடிச்சு போதுமே,
தந்தையாரிடம் தாரைவார்க்க பூமி இல்லை.

[1990-1992?]